Translate

Saturday, August 8, 2020

Govt. Jobs 2020

 

  • Government of Tamil Nadu Jobs 2020 - Survey Assistant Jobs in Chennai
    Government of Tamil Nadu
    Chennai, Tamil Nadu
    via Fresherslive
    3 days agoFull–time
  • NIE Jobs 2020 - Data Entry Operator Jobs in Chennai
    NIE National Institute of Epidemiology
    Chennai, Tamil Nadu (+1 other)
    via Fresherslive
    2 days agoFull–time
  • Government of Tamil Nadu Jobs 2020 - Zonal Waqf Officer Jobs in...
    Government of Tamil Nadu
    Chennai, Tamil Nadu
    via Fresherslive
    3 days agoFull–time
  • Government of Tamil Nadu Jobs 2020 - Legal Support Officer Jobs in...
    Government of Tamil Nadu
    Chennai, Tamil Nadu
    via Fresherslive
    3 days agoFull–time
  • Govt Jobs in Tamilnadu 2020 Apply Online For Various Jobs
    Tamilnadu
    Chennai, Tamil Nadu (+1 other)
    via Job Free Alert
    24 days ago₹15,001 a monthFull–time
  • RITES Jobs 2020: Apply for 2 IE/Sr. IE (Mechanical) Vacancies for...
    RITES Limited
    Chennai, Tamil Nadu
    via SabhiJobs
    3 days ago₹31T a monthFull–time
  • NIE Recruitment 2020 - 52 Nurses Vacancies Open
    ICMR-National Institute of Epidemiology
    Chennai, Tamil Nadu (+1 other)
    via GovtJobGuru.in
    3 days agoFull–time
  • Government Jobs in Chennai - 15000 Government Openings in Chennai
    Government of Tamilnadu (TN)
    Chennai, Tamil Nadu
    via Indian Railway Post - Indian Government Jobs
    3 days ago₹29,854–₹58,745 a monthFull–time
  • Southern Railway Recruitment 2020 – Apply Online For 197 Para...
    Southern Railway
    Chennai, Tamil Nadu
    via Govt Apply.In
    Over 1 month ago
  • Income Tax Jobs 2020 - Competent Authority and Administrator Jobs...
    Income Tax
    Chennai, Tamil Nadu
    via Fresherslive
    Over 1 month agoFull–time
  • Associate Jobs in Chennai
    Supermarket Grocery supplies pvt ltd
    Chennai, Tamil Nadu
    via Freshersworld.com
    2 days agoFull–time

JOB

 

Dhanekula Institute of Engineering and Technology, Vijayawada Wanted Professor/Associate Professor/Assistant Professor

Teaching Faculty Recruitment 2020 Job vacancy notification announced by Dhanekula Institute of Engineering and Technology, Vijayawada, Andhra Pradesh for 2020-2021 academic year for the...

Faculty Recruitment at Indian Institute of Technology, Roorkee

Teaching Jobs vacancy notification announced by Indian Institute of Technology, Roorkee, Uttarakhand for 2020-2021 academic calendar year. Eligible candidates may apply within 26th August...

VSM Group of Institutions Wanted Professor / Associate Professor / Assistant Professor / Lecturer...

Faculty Recruitment 2020 job vacancy notification announced for UG and PG Courses by VSM Group of Institutions, East Godavari, Andhra Pradesh for the post...

Faculty Recruitment at Dr.SSS Shivakumara Mahaswamy College of Engineering, Bangalore

Teaching Faculty Recruitment 2020 Job vacancy notification announced by Dr.SSS Shivakumara Mahaswamy College of Engineering, Bangalore, Karnataka for 2020-2021 academic year. Eligible candidates may...

Faculty Recruitment 2020 at S.B.Jain Institute of Technology Management & Research, Nagpur

Faculty Recruitment 2020 notification announced by S.B.Jain Institute of Technology Management & Research, Nagpur, Maharashtra - Assistant Professor Jobs, Associate Professor Jobs, and Professor...

Teaching Jobs/Non-Teaching Jobs at United University, Allahabad

Faculty Recruitment 2020 notification announced by United University, Allahabad, Uttar Pradesh - Assistant Professor Jobs, Associate Professor Jobs, and Professor Jobs. Eligible candidate may...

MIT World Peace University, Pune Wanted Professor/Associate Professor/Assistant Professor

Faculty Recruitment 2020 notification announced by MIT World Peace University, Pune, Maharashtra - Assistant Professor Jobs, Associate Professor Jobs, and Professor Jobs. Eligible candidate...

Teaching Jobs/Non-Teaching Jobs at GLA University, Mathura

Faculty Recruitment 2020 notification announced by  GLA University, Mathura, Uttar Pradesh - Assistant Professor Jobs, Associate Professor Jobs, and Professor Jobs. Eligible candidates may...

Friday, August 7, 2020

 கடந்த நூற்றாண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல அற்புதங்களை செய்தவர் பூண்டி மகான். அண்ணாமலையே அனைத்து சித்தர்கள், ஞானிகள் போன்ற இறையருள் அம்சத்தினர் அனைவருக்கும் புகழிடமாக உள்ளது.

இங்கு வசித்த ரமண மஹரிஷி, சேஷாத்ரி சுவாமிகள் பற்றி உலகம் அறிந்திருக்கும் . அப்படிப்பட்ட புண்ணியமலையான அண்ணாமலை அருகே போளூர் அருகேயுள்ள கலசப்பாக்கத்தில் வசித்தவர் சேஷாத்ரி சுவாமிகள்.
Advertisement Advertisement Advertisement

இவர் யார் எங்கிருந்து வந்தார் என்றேல்லாம் யாருக்கும் தெரியாது. இவரின் அன்பும் தீட்சண்ய பார்வையும் இவரை மகான் என மக்களுக்கு அடையாளம் காட்டியது.

ஒருமுறை ஊரில் மழை தண்ணீர் இல்லாமல் வானம் பொய்த்து விட்டது ஊர்மக்கள் ஒன்று கூடி மகானிடம் இது பற்றி கேட்கவேண்டும் என கிராம முன்சீஃப் முடிவெடுத்தார். திடீரென இரவு தூங்கபோகும்போது அவரிடம் எப்படி கேட்பது .

அவர் தியானத்தால் மழை பெய்யுமா? அவருக்கு அந்த அளவு ஆற்றல் இருக்கிறதா? உண்மையிலேயே அவர் சித்தர்தானா? என்று பலவாறு சிந்தித்த வண்ணம் தூங்கிவிட்டார். நள்ளிரவு…, ஆழ்ந்த தூக்கத்திலிருந்த போது, யாரோ கன்னத்தில் மென்மையாக தட்டுவது போல் உணர…, எதிரே மஞ்சள் நிற ஒளியோடு மகான் நின்றிருந்தார்.

‘’என்ன முனிசீப்.., இந்த மகான் நிஜமாகவே சித்தனா? இவனுக்கு அந்தளவு சக்தி இருக்கா! இவன்கிட்டே போய் கேட்டா மழை பெய்யுமான்னு நினைக்கிறியா? கேட்டார். இது கனவா… நிஜமா என்று உணர்ந்திடும் நிலையில்லாத முன்சீப் இருந்தார்.

”ஐயா…, தப்பாக நினைக்க வேண்டாம். நீங்கள் கடவுள் என நான் நம்புகிறேன். என்னை மன்னித்து விடுங்கள்..’பணிந்து வேண்டினர்.

பெரிய வார்த்தைகள் எல்லாம் பேச வேண்டாம் என சொல்லிவிட்டு மகான் மறைந்து விட்டார்.

காண்பது கனவு போலவே முன்ஷீப்புக்கு தெரியவில்லை அடுத்த சில நிமிடங்களில் லேசாக தூறல் விழ ஆரம்பித்தது. அடுத்த சில விநாடிகளில் ‘பளீர்’ என்று மின்னல் வெட்டி மழை வலுக்க ஆரம்பித்தது. கொஞ்ச கொஞ்ச வலுத்த மழை பேய் மழையாகி, இடி மின்னலுடன் பெரும் மழையாகியது.

இதை பார்த்து ஊரே வியந்தது.

இவர் இப்பகுதிகளில் அலைந்து திரிந்து மக்களுக்கு எளிய போதனைகளையும் மக்களுக்கு கடவுள் வழிபாட்டின் நன்மைகளையும் விளக்கி பல அற்புதங்களை செய்தவர். உலக சிந்தனையின்றி ஒரு சுவாமியாருக்கு உரிய லட்சணத்தோடு இப்பகுதிகளில் இப்பகுதி மக்களால் போற்றப்பட்டவர் சுமார் 48 ஆண்டுகளுக்கு முன் கலசப்பாக்கம், குருவிமலை உள்ளிட்ட இப்பகுதியில் வாழ்ந்து ஜீவசமாதியானவர் இவர்.

1978ம் ஆண்டில் பூண்டியில் ஜீவசமாதியானார் சுவாமிகள். இங்கு இவருக்கு கோவிலும்கட்டப்பட்டுள்ளது இங்கு சென்று நாம் ஆத்மார்த்தாமாக வேண்டினால் ஜீவசமாதியில் ஜீவனுடன் இருக்கும் பூண்டி சுவாமிகள் நம்மை துன்பம் துயரத்தில் இருந்து காப்பார் என்பது நம்பிக்கை..

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் என்கிற நகருக்கு மேற்கேயுள்ள கலசபாக்கதில் இருந்து 3 கி.மீ தொலைவில் இவரது ஜீவசமாதி உள்ளது.

Saturday, June 2, 2012

வழுக்கை தலையில் முடி வளர

முடி உதிர்வதை தடுக்க..

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

________________________________________

வழுக்கையில் முடி வளர...

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

________________________________________

இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

________________________________________

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

________________________________________

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

________________________________________

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

________________________________________
முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

________________________________________

சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

_________________________________________

புழுவெட்டு மறைய:


நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

_________________________________________

பொடுகை விரட்ட வேப்பம்பூ:

பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்

_________________________________________

வைட்டமின் குறைபாடு நீங்க...

கறிவேப்பிலை, பிரண்டை, கொத்துமல்லி, புதினா, முளைக்கீரை, தண்டுக்கீரை, பொன்னாங் கன்னிக் கீரை, பசலைக் கீரை இவற்றை தினம் ஒவ்வொன்றாக நம் உணவில் சேர்த்துக் கொண்டே இருந்தால், வைட்டமின் குறைபாடு நம்மை அண்டவே அண்டாது. மேலே சொன்னவற்றில் நான்கு வகைகளில் துவையல் செய்யலாம். மற்ற கீரைகளை பாசிப் பருப்போ, துவரம்பருப்போ சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம்.

வீணாக கிடக்குதா புதினா?: புதினாவை அதிகம் வாங்கி விட்டு அல்லல்படுவதை விட, அதிகமாக இருக்கும் புதினாவில் இலையை மட்டும் தனியாக எடுத்து, கல் உப்பு போட்டு கசக்கி அதைப் பற்களில் தினமும் நன்றாகத் தேய்த்தால், வாயில் கெட்ட வாடை நீங்கி, பல் பளிச்சிடும்.

__________________________________________

Friday, January 27, 2012

Poondi Swamiyar


http://www.youtube.com/watch?v=PnGVdNoy-fw&noredirect=1

இருபதாம் நுற்றாண்டு இறுதியில் தென் தமிழகத்தில் நினைக்க முக்தி தரும் திருவண்ணமலைக்கு அருகில் போளூர் தாலுகா கலசபாக்கதில் இருந்து 3 கி.மீ தொலைவில் ஒரு ஞானி இருந்தார். அவருக்கென்று பேர் கூட கிடையாது. ஜீவ முக்தி அடைவதற்கு முன்பு சில காலம் பூண்டி கிராமத்தில் தங்கி இருந்ததால் பூண்டி மகான் என்றும், பூண்டி சாமியார் என்றும் மக்கள் அழைக்கலாயினர். சேயாற்றின் கரையில் பெரும்பாலும் இருப்பார் என்பதால் பூண்டி மகான் ஆற்றுசுவாமிகள் என்றும் அழைக்கலாயினர்.

வட ஆற்காடு மாவட்டம் வேலூருக்கு தெற்கே செல்லும் நெடுஞ்சாலை பாதையிலுள்ள போளூர் என்கிற நகருக்கு மேற்கேயுள்ள கலசபாக்கத்தில் வாழ்ந்தவர்.இவர் சென்ற நூற்றாண்டின் வாழ்ந்த சித்தர் என்பதால் இவரைப் பற்றி பல அமானுஷ்ய தகவல்கள் போளூர் ,கலசபாக்கம், பூண்டி போன்ற இடங்களில் வாழும் மக்களால் பிரமிப்பாக பேசப்படுகிறது.

நீண்ட தாடியும் தீட்சண்ய பார்வையுமாக மிக எளிமையான மனிதரைப் போல் காட்சியளிக்கும் சித்திரை அவதாரப் புருஷனாக அந்தப்பகுதி மக்கள் பக்தியோடு வணங்கினார்கள். கலசபாக்கம் என்பது ஆற்றங்கரைமான கிராமம் ஆகும். தொடர்ந்து ஒருநாள் முழுதும் மழை பெய்தால் ஆறு முழுதும் வெள்ளம் பெருகி காட்டாறு போல் பொங்கி பெருக்கெடுத்து ஓடும். பூண்டி மகான் அந்த கிராமத்திற்கு வந்தபோது யாரோ ஒரு பித்தன் என்பது போலத்தான் அந்த கிராம மக்கள் பார்த்தனர்.ஆனால் அவருக்குள்ள அமானுஷ்ய சக்தியும், அவர் தந்த திருநீறு மற்றும் மூலிகை இலைகளால் எந்த நோயையும் குணப்படுத்தி அக்கிராம மக்களை காத்து வந்தார். இதனால் பாமரமக்களும், மற்றவர்களும் அவரை தேடியும், நாடியும் வந்து வணங்கி அன்பு செலுத்த ஆரம்பித்தனர். அந்த ஆற்றங்கரை மணல் மேட்டிலே அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்திருப்பார்.

ஒருசமயம், தொடர்ந்து வானம் பெய்த்தால் மழை நின்று போனது. மழை இல்லாத காரணத்தால் பயிர் தொழில், விவசாயம் செய்ய முடியாமல் மக்கள் வறுமைச்சூழலில் வேதனையும், அவதியும் பட்டனர், ஊரின் கிராம முன்சீப் கிராம மக்களை ஒன்று கூட்டி , கிராமத்தைக் காப்பாற்றும் படி நாளை மகானிடம் சென்று முறையிடலாம் என்று முடிவு செய்தனர்.

அன்றிரவு.., முன்சீப் மகானிடம் எப்படி கேட்பது....,அவர் தியானத்தால் மழை பெய்யுமா? அவருக்கு அந்த அளவு ஆற்றல் இருக்கிறதா? உண்மையிலேயே அவர் சித்தர்தானா? என்று பலவாறு சிந்தித்த வண்ணம் தூங்கிவிட்டார். நள்ளிரவு..., ஆழ்ந்த தூக்கத்திலிருந்த போது, யாரோ கன்னத்தில் மென்மையாக தட்டுவது போல் உணர..., எதிரே மஞ்சள் நிற ஒளியோடு மகான் நின்றிருந்தார்.

‘’என்ன முனிசீப்.., இந்த மகான் நிஜமாகவே சித்தனா? இவனுக்கு அந்தளவு சக்தி இருக்கா! இவன்கிட்டே போய் கேட்டா மழை பெய்யுமான்னு நினைக்கிறியா? கேட்டார். இது கனவா... நிஜமா என்று உணர்ந்திடும் நிலையில்லாத முன்சீப் இருந்தார்.

”ஐயா..., தப்பாக நினைக்க வேண்டாம். நீங்கள் கடவுள் என நான் நம்புகிறேன். என்னை மன்னித்து விடுங்கள்..’பணிந்து வேண்டினர்.

’’என்ன முனிசீப் பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க... ஒரு செயலை செஞ்சு முடிக்கறதுக்கு முன்னாடி எப்படி நம்பமுடியும்? இது இயற்கைதானே! சரி... சரி இப்ப எழுந்து உன் வீட்டு வாசலுக்குப் போ நான் நிஜமா பொய்யான்னு தெரியும்...’ என்று சொல்ல அடுத்த நொடி ஏதோ உணர்ந்தவராக முனிசீப் சடாரென எழுந்து உட்கார்ந்தார். அப்படி என்றால் இவ்வளவு நேரம் சித்தர் நம் எதிரில் நின்று பேசியது கனவா? ஆனால்,அது கனவாக தெரியவில்லையே..., நிஜத்தில் நடப்பது போலல்வா இருந்தது ‘’? என்று வியந்து யோசித்தபடி வீட்டு வாசலுக்கு வந்தார்.

அப்போது லேசாக தூறல் விழ ஆரம்பித்தது. அடுத்த சில விநாடிகளில் ‘பளீர்’ என்று மின்னல் வெட்டி மழை வலுக்க ஆரம்பித்தது. கொஞ்ச கொஞ்ச வலுத்த மழை பேய் மழையாகி, இடி மின்னலுடன் பெரும் மழையாகியது.

நள்ளிரவு துவங்கி, விடியல் வரை அடைமழையாய் பெய்ததால் பதினைந்து ஆண்டுகள் மழையின்றிகாய்ந்து கிடந்த ஆற்றில் வெள்ளம் வர துவங்கியது. விடிந்ததும் மனசு முழுக்க சித்தரின் நினைவுகள் நிறைந்திருந்தது. நடந்த விபரங்களை ஊர் மக்களிடம் கூறி, அவரை காண ஆற்றங்கரக்குச் சென்றார்.அங்கே சித்தர் இல்லை. பலவிடங்களில் தேடியும் சித்தர் காணவில்லை. அப்போது கூட்டத்திலிருந்த சிறுவன், ‘’அங்க பாருங்க சாமியார் உட்கார்ந்திருந்த இடத்திலே மண் மூடியிருக்கு..; என்று கூற மண் மூடிய இடத்தை தோண்ட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் மண்ணுக்கடியில் இருந்த
சித்தரை வெளியே தூக்கி எடுத்தனர். அதிர்ச்சியில் எல்லோரும் நெகிழ்வாக கண்கலங்கி....., சட்டென்று கண் திறந்தார்.

’’போதுமா... நீங்க கேட்ட மாதிரி மழை பெய்துவிட்டது...’’ என்று கூற ஊர் மக்கள் யாவரும் நெகிழ்வாக கரம் கூப்பி வணங்கினர்..

ஊரிலான், பேரிலான் :

எப்பொழுது இந்த பகுதிக்கு வந்தார்?,எங்கிருந்து வந்தார்?, என எவ்வித தகவலும் கிடையாது. அவருடைய பெற்றோர் யார்?, உற்றார் உறவினர் யார்? என எந்த ஒரு செய்தியும் ஒருவருக்கும் தெரியாது.

சுமார் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கலசபாக்கம், குருவிமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் தென்பட தொடங்கியாதாக சிலர் கூறுகின்றனர். மனம் போன போக்கில் பிச்சைக்காரர் போன்று திரிந்து கொண்டு. எவ்வித ஆன்மிக அடையாளமும் இன்றி இருந்ததால் பொது மக்கள் யாரும் கவனிக்கவும் இல்லை கண்டுகொள்ளவும் இல்லை .

அவரது செய்கைகள் சிலருக்கு பைத்தியக்காரத்தனமாக தோன்றியது.அவர்கள் அவரை ஏளனம் செய்த போதும் எதிர்ப்போ மறுப்போ கூறாமல் அமைதியாக அங்கிருந்து sendru விடுவார். புற உலக சிந்தனை இன்றி சுயம்பாக இருப்பதை ஒரு சில ஆன்மிக பெரியவர்கள் கவனிக்கலாயினர்.

சுவாமிகளின் பொன்மொழிகள்...

தன் பசித்துன்பத்தைக் போருத்துக்கொல்லுதலும், பிறருக்கு மனதினாலும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் தவத்தின் வலிமையாகும்.

பணம் எட்டாத உயரமும், பாயாத பாதாளமும் இல்லைதான்; ஆனால் சத்தியம் பணத்தின் நிழலில் தங்கக் கூட தயங்குகிறது.

இடி விழுந்தவனுக்கு சிகிச்சை பலிக்காதது போல, நன்றி மறந்தவனுக்கு என்றும் நன்மை கிட்டாது.

மக்களை மக்களென நினைத்து பணியாற்று செய்கை வந்தாலொழிய நாடு நன்மை பெறாது.

மேகம் கருகி மழை பொழிகிறது. மனிதன் பிறனைக் கருக்கி தானே கெடுகின்றான்.

தன்னிலும் இழிந்த ஒருவனைத் தனக்கு சமமாக நினைத்து தன் கடமையை செய்பவன்தான் பெரிய மனிதனும், அறிவுடையவனுமானவன்.

எல்லோரும் தீய பலன்களிலிருந்து தப்ப முயற்சிக்கின்றனர். ஆனால் அவற்றை செய்வதில் எல்லோரும் ஒன்று போல் தயக்கம் காட்டுவதில்லை.

மனிதன் மனதில் பூசை செய்து தான் நினைத்த காரியம் நடக்காததை நினைத்து நொந்து மடிகிறான். மனதில் பூசை செய்வதை விட ஜீவனில் பூசை செய்வதே சிறந்தது.

Govt. Jobs 2020

  Government of Tamil Nadu Jobs 2020 - Survey Assistant Jobs in Chennai Government of Tamil Nadu Chennai, Tamil Nadu via Fresherslive 3 days...