Translate

Friday, April 30, 2010

மஞ்சள் காமாலை

தடுப்பூசி தகவல்கள் : மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டாலும் மஞ்சள் காமாலை வரும் !!
மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டாலும் மஞ்சள் காமாலை வரும் !!
அப்படி யென்றால் அந்த ஊசி பலன் இல்லாததா–முதலில் மஞ்சள் காமாலை பற்றி தெரிந்து கொள்வோம்
மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல. அது ஒரு நோய்க்குறி. இரத்தத்தில் பிலிரூபின் என்ற வேதிப்பொருள் அதிகரிப்பதால் ஏற்படும் நிலை தான் மஞ்சள் காமாலை.
ஒரு நோய்க்கு பல நோய்க்குறிகள் இருக்கும்.ஒரு நோய்க்குறி பல நோய்களுக்கு இருக்கும்.
அதாவது உங்கள் கணினி திரையில் ஒன்றும் தெரியவில்லை என்று வைத்துக்கொள்வோம். (நோய்க்குறி)இது பல காரணங்களினால் (நோய்கள்) வரலாம்.1. திரையில் தவறு2. திரைக்கும் கணினிக்கும் இடையில் இணைக்கும் கம்பியில் (கேபிள்) தவறு3. கணினியில் தவறு.
இது போல் பல காரணங்களினாலும் திரையில் ஒன்றும் தெரியாது.
-oOo-இப்பொழுது மஞ்சள் காமாலைக்கு வருவோம்
அதற்கு முன் கொஞ்சம் அடிப்படை மருத்துவம் பயிலலாம்.
இரத்ததில் சிவப்பணுக்களும் வெள்ளை அணுக்களும் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.
இதில் சிவப்பணுவினுள் (Red Blood Cells – RBC) உள்ள ஹீமோகுலோபின் (Hemoglobin) என்ற பொருள் தான் பிராண வாயுவை (ஆக்ஸிஜன்) நுரையீரலிலிருந்து உடலின் பிற இடங்களுக்கு கொண்டு செல்கிறது.சிவப்பணுக்கள் சாகா வரம் பெற்றவை அல்ல. அவை ஒரு குறிப்பிட்ட காலம் பணி செய்த பின் இறந்து விடுகின்றன. அப்படி மரணித்த சிவப்பனுவினுள் உள்ள ஹீமோகுலோபின் சில வேதியியல் மாற்றங்களால் பிலிரூபின் (Bilirubin) என்ற பொருளாகிறது. இதை அன்கான்ஜுகேடட் பிலிரூபின் (Unconjugated Bilirubin) (எதனுடனும் இணைக்கப்படாத பிலிரூபின்) என்று அழைக்கிறார்கள்
இந்த பிலிரூபின் என்பது உடலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய பொருள். ஆனால் இணைக்கப்படாத பிலிரூபின் என்பது நீரில் கரையாத பொருள் (வாட்டர் இன்சால்யுபிள்) எனவே சிறுநீரகங்களால் இந்த இணைக்கப்படாத பிலிரூபினை அதிக அளவில் வெளியேற்ற முடியாது. (கொஞ்சம் வெளியேரும்) இதற்கு நமது உடலில் ஒரு அருமையான ஏற்பாடு உள்ளது. ஈரலில் (லிவர்) இந்த பிலிரூபினானது குலுக்குரோனிக் அமிலத்துடன் சேர்ந்து (குலுக்குரோனிக் ஆசிட்) இணைக்கப்பட்ட பிலிரூபின் ஆகிறது (கான்ஜுகேடட் பிலிரூபின்) (Conjugated Bilirubin) இந்த இணைக்கப்பட்ட பிலிரூபினனை சிறு நீரகங்கள் முழுமையாக வெளியேற்றி விடும்.
ஆகவே இரத்த அணுக்களில் உள்ள ஹீமோகுலோபினிலிருந்து பிலிரூபின் வருகிறது. இந்த இணைக்கப்படாத பிலிரூபின் இரத்தத்தில் இருக்கிறது. இது மஞ்சள் நிறப்பொருள். இது ஈரலில் இணைக்கப்பட்ட பிலிரூபின் ஆகிறது. இந்த இணைக்கப்பட்ட பிலிரூபினானது ஈரலிலிருந்து பித்தநீருடன் (பைல்) சேர்ந்து பித்த நாளங்கள் வழியாக (பைல் டக்ட்) இரைப்பை (டியோடினம்) வருகிறது. இதில் ஒரு பங்கு சிறுகுடலில் இருந்து இரத்ததிற்கு சென்று சிறுநீரகத்தினால் வெளியேற்றப்படுகிறது. ஒரு பங்கு மலத்துடன் வெளியேற்றப்படுகிறது.
இது தான் நமது உடலில் தினமும், ஏன் ஒவ்வொரு வினாடியும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள்
-oOo-இப்பொழுது ஒரு அச்சு அலுவலகத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். அதில் ஒரு பிரிவில் சில தொழிலாளிகள் வேலை பார்க்கிறார்கள்
ஒரு தொழிலாளிக்கு (தொழிலாளி ம என்று வைத்துக்கொள்வோம்) என்ன வேலையென்றால் வெளியிலிருந்து வரும் A2 அளவு காகிதத்தை A3 அளவிற்கு வெட்ட வேண்டும். அதை அறை 1ல் போட வேண்டும்
அடுத்த தொழிலாளிக்கு (தொழிலாளி ஈ என்று வைத்துக்கொள்வோம்) அறை 1ல் உள்ள A3 அளவிற்கு வெட்டப்பட்ட காகிதத்தை A4 அளவிற்கு வெட்ட வேண்டும். அதை அறை 2ல் போட வேண்டும்
அடுத்த தொழிலாளிக்கு (தொழிலாளி பி என்று வைத்துக்கொள்வோம்) இந்த A4 காகிதத்தை அறை 2லிருந்து எடுத்து ஒரு பகுதியை அறை 3லிளும் ஒரு பகுதியை அறை 1றிலும் போட வேண்டும்
அடுத்த தொழிலாளிக்கு (தொழிலாளி சி என்று வைத்துக்கொள்வோம்) இந்த A4 காகிதத்தை அறை 1றிலிருந்து எடுத்து முழுவதும் அறை 4கிளும் அதை போல் A3 காகிதத்தை அறை 1றிலிருந்து எடுத்து சிறு பகுதியை அறை 4கிளும் போட வேண்டும்-oOo-இப்பொழுது தொழிலாளி ம அதிகம் வேலை பார்க்கிறார் என்றால் என்ன நடக்கும்1. அறை 1ல் A3 காகிதம் அதிகமாகும்2. இதில் ஒரு பகுதியை தொழிலாளி ஈ A4 ஆக வெட்டி விடுவார்.3. ஒரு பகுதி A3 காகிதத்தை சி அறை 4கிற்கு அனுப்பி விடுவார்.4. மீதி A3 காகிதங்கள் அறை 1ல் இருக்கும்5. அறை 2ல் உள்ள A4 காகிதங்கள் ஒரு பகுதி அறை 1க்கும் ஒரு பகுதி அறை 3க்கும் செல்லும்
மொத்தமாக அறை 1ல் அதிக அளவு A3 காகிதம் இருக்கும்-oOo-தொழிலாளி ஈ வேலை செய்யாவிட்டாலோ, அல்லது வழக்கமாக செய்யும் வேலையை விட குறைவாக செய்தாலோ என்ன நடக்கும்
1. அறை எண் 1ல் அதிக அளவு A3 காகிதம் இருக்கும்2. அறை 2லிலும் அறை 3லிலும், அறை 4லிலும் கம்மியான அளவு A4 காகிதம் இருக்கும்-oOo-தொழிலாளி பி வேலை செய்யாவிட்டாலோ, அல்லது வழக்கமாக செய்யும் வேலையை விட குறைவாக செய்தாலோ என்ன நடக்கும்
1. அறை எண் 2லில் அதிக அளவு A4 காகிதம் தேங்கிவிடும்2. அறை எண் 3லில் A4 காகிதமே இருக்காது.3. அவ்வாறு தேங்கும் A4 காகிதங்கள் அறை எண் 1க்கு மீண்டும் தொழிலாளி ஈ மூலமாகவே வரும்.4. அறை 1ல் அளவிற்கு அதிகமாக A4 காகிதங்கள் இருக்கும்5. அதில் ஒரு பகுதி தொழிலாளி சி மூலமாக அறை 4 செல்லும்-oOo-இப்பொழுது நமது உடலிற்கு வருவோம்
வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு ஹீமோகுலோபின் உடைந்தால்1. அதிக அளவு பிலிரூபின் உருவாகிறது.2. இதில் ஒரு பகுதி இணைக்கப்பட்ட பிலிரூபினாகிறது3. மீதி இணைக்கப்படாத பிலிரூபினாக இரத்தத்தில் உள்ளது.4. இணைக்கப்படாத பிலிரூபின் அதிக அளவில் சிறுநீரில் வெளியேறுகிறது. எனவே சிறுநீர் வழக்கமான நிறத்திலேயே இருக்கும். அதாவது நிறமல்லாமல். இதனால் இந்த வியாதியை நிறமல்லா சிறுநீர் மஞ்சள் காமாலை என்றும் அழைக்கலாம் (acholuric jaundice)
இந்த வியாதியை ப்ரீ ஹெபாடிக் ஜாண்டிஸ் (Pre hepatic Jaundice – அதாவது பிலிருபீன் வழக்கமாக செல்லும் பாதையில் ஈரலுக்கு முன்னர் கோளாறு உள்ளது) என்று அழைப்பார்கள். பொதுவாக இரத்த அணுக்கள் அதிகம் உடைபடும் வியாதிகளில் (ஹீமோலைடிக் டிஸாடர் – hemolytic disorders) இந்த வகை மஞ்சள் காமாலை வரும். இந்த வகை மஞ்சள் காமாலைக்கு வைத்தியம் பார்க்க முதலில் இரத்த சிவப்பணுக்கள் உடைபடுவதை தடுக்க வேண்டும். கீழா நெல்லி உதவாது .-oOo-ஈரல் வேலை செய்யாவிட்டாலோ அல்லது வழகத்திற்கு குறைவாக வேலை செய்தாலோ1. வழக்கமான அளவில் உருவாகும் பிலிரூபின் இரத்ததில் தேங்குகிறது2. சிறுநீரில் அதிக அளவு இணைக்கப்படாத பிலிரூபின் வெளியேறுகிறது.
இந்த வகை வியாதிகளை ஹெபாட்டிக் ஜாண்டிஸ் என்று அழைக்கிறார்கள். அதாவது பிரச்சனை ஈரலில் உள்ளது.
ஈரலில் என்ன பிரச்சனை என்றால்
1. வேதியல் பொருட்களால் இருக்கலாம்.2. சில வகை மருந்து பொருட்களால் இருக்கலாம்.. முக்கியமாக – பக்க விளைவுகள் இல்லை என்று பொய் சொல்லி (அல்லது அறியாமல் சொல்லி) விற்கப்படும் / அளிக்கப்படும் சித்தா, ஆயுர்வேதா, யூனானி, ஹோமியோமதி மருந்துக்களில் பல ஈரலையும் சிறுநீரகத்தையும் நாசம் செய்ய வல்லவை. பக்க விளைவு இல்லாத மருந்து எதுவும் கிடையாது (இது குறித்து விளக்கமாக வேறு இடுகையில் பின்னர் பார்க்கலாம்)3. ஆட்டோ இம்யூன் டிஸார்டர் – உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது உடலுக்கு எதிராக செயல்படும் விநோத, வேதனை நிகழ்வு இது. அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தி நோய்கிருமிகளை மட்டும் அழிக்காமல் உடலையும் அழித்து விடும். சில நேரங்களில் நோய்கிருமிகளுக்கு பதில் உடல் திசுக்களை மட்டும் அழித்துவிடும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆஸ்துமாவுக்கும் இது தான் காரணம். 23-04-2008 அன்று தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடப்பட்ட சுமார் 10,000 குழந்தைகளில் சுமார் 10 குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டு அதில் 4 குழந்தைகள் மரணமடைய காரணமும் அந்த 4 குழந்தைகளின் உடலில் இருந்த அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்திதான். இது குறித்து வேறு இடுகையில் தனியாக பார்ப்போம். ஒவ்வொரு புதன் கிழமையும் தமிழகம் முழுவதும் கிராம சுகாதார செவிலியர்கள் 10000 குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி போடுகிறார்கள். மொத்தமாக ஒரு வருடம் தமிழகத்தில் சுமார் 50,00,000 (50 லட்சம்) தடுப்பூசிகள் போடப்படுகின்றன. மேலும் 50,00,000 மருந்துகள் வாய் வழியாக தரப்படுகிறது.4. கிருமிகளினால் இருக்கலாம்
கிருமிகள் என்றால்1. பேக்டிரியா2. வைரஸ்3. பங்கஸ்4. பூச்சிகள், புழுக்கள்
இதில் முக்கியமாக வைரஸ் என்று பார்த்தோம் என்றால் அதில்1. பிற நோய்களை உருவாக்கும் (அதே நேரத்தில் ஈரலிலும் பாதிப்பை ஏற்படுத்தும்) வைரஸ்கள்2. முக்கியமாக ஈரலை மட்டும் தாக்கும் வைரஸ்கள்
இந்த இரண்டாவது முக்கியமாக ஈரலை மட்டும் தாக்கும் வைரஸ்களளில் 7 வகைகள் உள்ளன1. ஹெபடைட்டிஸ் A2. ஹெபடைட்டிஸ் B3. ஹெபடைட்டிஸ் C4. ஹெபடைட்டிஸ் D5. ஹெபடைட்டிஸ் E6. ஹெபடைட்டிஸ் F7. ஹெபடைட்டிஸ் Gஇது போன்ற ஈரல் பாதிப்பினால் வரும் மஞ்சள் காமாலை நோய்கள் பெரும்பாலும் ஹெபடைட்டிஸ் A வைரஸ் கிருமியினாலேயே வருகின்றன. எனவே இது தானாகவே சரியாகிவிடும். கொஞ்ச நாட்களுக்கு எண்ணை மற்றும் கொழுப்பு சத்து அதிகம் இல்லாத உணவை சாப்பிட்டால் போதும்.
அது போல் சூடு போடுவதால் இது சரியாவதில்லை
கீழா நெல்லி என்பது இந்த நோய்க்கு (வைரஸ்) மருந்து அல்ல. அது ஈரல் விரைவில் குணமடைய வைப்பதாக நம்பம்படுகிறது
கீழா நெல்லி குறித்து பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு அவை உடலுக்கு (அதிக அளவில்) தீங்கு விளைவிப்பதில்லை என்று கண்டுபிடித்து உள்ளார்கள். (மற்ற சித்த, ஆயூர்வேத மருந்துகள் இது போன்ற ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்படாமலேயே பக்க விளைவுகள் இல்லை என்று பொய் சொல்லப்படுகிறது)
-oOo-ஈரலிருந்து இரைப்பைக்கு பித்தம் வரும் வழியில் எதேனும் அடைப்பு இருக்கிறது என்றால் என்ன நடக்கும்
1. வழக்கமான அளவில் உருவாகும் பிலிரூபின் வழக்கமாக செயல்படும் ஈரலினால் இணைக்கப்பட்ட பிலிரூபினாக மாற்றப்படுகிறது2. பித்த நீர் வழியாக வெளியேற முடியாத இணைக்கப்பட்ட பிலிரூபின் மீண்டும் இரத்ததில் சேறுகிறது3. இரத்ததில் அளவிற்கு அதிகமான இணைக்கப்பட்ட பிலிரூபின் உள்ளது4. சிறுநீரில் அதிக அளவு இணைக்கப்பட்ட பிலிரூபின் வெளியேறுகிறது. சிறுநீர் மஞ்சள் நிறமாக மாறுகிறது.5. இரைப்பைக்கு பித்த நீர் வராததால், கொழுப்பு சத்து ஜீரனிக்கப்படுவதில்லை.6. எனவே மலத்தில் கொழுப்பு சத்து வெளியெறுகிறது7. மலம் வெள்ளை நிறமாக உள்ளது.
இது போன்ற நிலைமைகளை போஸ்ட் ஹெபாடிக் ஜான்டிஸ் என்று அழைக்கிறார்கள். அதாவது ஈரலிலிருந்து பிலிரூபின் வெளியேறியபின் பிரச்சனை. அதுவும் பெறும்பாலும் எதேனும் அடைப்பு.இந்த அடைப்புஈரலுக்கு உள்ளும் இருக்கலாம் – இண்ட்ரா ஹெபாடிக் Intrahepaticஈரலுக்கு வெளியிலும் இருக்கலாம் – எக்ஸ்ட்ரா ஹெபாடிக் Extrahepaticஅதே போல் இது (இந்த அடைப்பு )பிறக்கும் போதே இருக்கலாம் – கன்ஜெனிடல் Congenitalபிறகு வந்திருக்கலாம் – அக்கொயர்ட் Acquired
இதில் 20 வயதிற்கு மேல் திடீரென்று ஒருவருக்கு மஞ்சள் காமாலை வந்து மலம் வெள்ளை நிறமாக அதிக கொழுப்புடன் வருகிறது என்றால் அதற்கு காரணம் எதோ அடைப்பு.
அது பித்த கற்களாகவும் (பைல் ஸ்டோன் Bile Stone) இருக்கலாம்அல்லது புற்று நோயாகவும் (கான்ஸர் Cancer) இருக்கலாம்
முக்கியமான விஷயம், இது போன்ற நோய்களினால் வரும் மஞ்சள் காமாலை கீழா நெல்லி சாப்பிட்டாலோ அல்லது என்ன மருந்து சாப்பிட்டாலும் சரியாகாது. இதற்கு கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்
அதுவும் புற்று நோய் என்றால் ஆரம்ப கட்டத்திலேயே அறுவை சிகிச்சை செய்தால் தான் பிழைக்க முடியும்.-oOo-சரி இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்க வேண்டிய விஷயம்1. மஞ்சள் காமாலை பல காரணங்களினால் வரும்2. இந்த காரணங்கள் குறித்து (ஹீமோலைடிக் டிஸாடர், டுபின் ஜான்ஸன் சிண்ட்ர்ரோம், பித்த நீர் பாதை அடைப்பு) அறியாத (அதாவது படிக்காத) ஒருவரிடம் சென்று மஞ்சள் காமாலைக்கு மருந்து சாப்பிடுவது என்பது எமனுக்கு வெத்திலை பாக்கு வைத்து அழைப்பது போலாகும்3. எனவே உங்களுக்கோ அல்லது உங்கள் உறவினர் / நண்பர்கள் யாருக்காவது மஞ்சள் காமாலை என்றால் முதலில் ஒரு நல்ல மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து, இரத்த பரிசோதனை செய்து அது ஹெபாடிக் ஜாண்டிஸ் தான் என்று உறுதி படுத்தி கொள்ள வேண்டும். வெறும் கீழா நெல்லி மற்றும் பத்தியம் இருந்தால் உயிருக்கு ஆபத்து-oOo-சரி இப்பொழுது முதலில் நாம் பார்த்த கேள்விக்கு வருவோம்.
மஞ்சள் காமாலை தடுப்பூசி என்று அனைவரும் போடுகிறார்களே. அது என்ன
இங்கு (முக்கியமாக முகாம் அமைத்து தனியாரால்) போடப்படும் மஞ்சள் காமாலை தடுப்பூசி என்பது ஹெபடைடிஸ் B வைரஸ் கிருமிக்கு மட்டும் எதிரானது தான்
இந்த தடுப்பூசி போட்டால் மஞ்சள் காமாலை வராதாஇந்த தடுப்பூசி போட்டால் ஹெபடைடிஸ் B வைரஸ் கிருமி மற்றும் ஹெபடைடிஸ் D வைரஸ் கிருமியினால் ஏற்படும் மஞ்சள் காமாலை நோய்கள் மட்டுமே வராது.
பிற வைரஸ் கிருமிகள்அனைத்து பேக்டிரியா கிருமிகள்அனைத்து பங்கஸ் கிருமிகள்அனைத்து பூச்சிவகைகள்அனைத்து புழுக்கள்அனைத்து ப்ரீ ஹெபாடிக் வகைகள்அனைத்து போஸ்ட் ஹெபாடிக் வகைகள்
மூலம் வரும் அனைத்து மஞ்சள் காமாலைகளும் வரும்
பொதுவாக வரும் மஞ்சள் காமாலை என்ன வகைஹெபடைடிஸ் A வைரஸ் கிருமியினால் வருவது. நீங்கள் மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டாலும் இந்த வகை மஞ்சள் காமாலை தொடர்ந்து வரும்
அப்படி யென்றால் இந்த தடுப்பூசியினால் என்ன பலன்ஹெபடைடிஸ் A வைரஸ் கிருமியினால் வரும் மஞ்சள் காமாலை என்பது தானாக சரியாகிவிடும். இதனால் உயிருக்கு ஆபத்து கிடையாது. வைத்தியம் தேவையில்லை
ஹெபடைடிஸ் B வைரஸ் கிருமியினால் வரும் மஞ்சள் காமாலை என்பது தானாக சரியாகாது. இதனால் உயிருக்கு ஆபத்து உண்டு. கண்டிப்பாக வைத்தியம் தேவை
வேறு ஏதாவது வித்தியாசம் உள்ளதாஹெபடைடிஸ் A வைரஸ் கிருமி நீர் மூலம் பரவும் (அதாவது குடிநீர் மூலம்). சுருங்கச்சொன்னால் காலரா எப்படியெல்லாம் பரவுமோ, அப்படியெல்லாம்ஹெபடைடிஸ் B வைரஸ் கிருமி இரத்தம் மூலம் பரவும் (அதாவது இரத்தம் ஏற்றுவது, ஒருவருக்கு போட்ட ஊசியை அடுத்தவருக்கு போடுவது, ஒருவரின் இரத்தம் நமது உடலில் படுவது, பாதுகாப்பற்ற உடலுறவு மூலம்) – சுருங்கச் சொன்னால் எய்ட்ஸ் எப்படி யெல்லாம் பரவுமோ அப்படியெல்லாம்
ஹெபடைடிஸ் B வைரஸ் கிருமி தடுப்பூசியினால் பாதிப்பு உண்டா
மிகவும் குறைவு. அனைத்து தடுப்பூசிகளிலும் இது பாதுகாப்பானது என்று கூறலாம். இந்த மருந்து பெரும்பாண்மையான தடுப்பூசிகளை போல் கிருமிகளிலிருந்து செய்யப்படுவது அல்ல. அதற்கு பதில் நவீன முறைகளினால் வேதியல் பொருட்களிலிருந்து செய்யப்படுவது.
ஹெபடைடிஸ் B வைரஸ் கிருமி தடுப்பூசியினால் பலன் உண்டா
நீங்கள் இரத்தம் தொடர்பான தொழில் செய்பவராக இருந்தால் (உதாரணம் மருத்துவத்துறை, ஆய்வக உதவியாளர் போன்ற பணிகள்) இதனால் உங்களுக்கு பலன் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு உயிர் கொல்லி நோய் வராது.
மற்றவர்களுக்கு (பொது மக்களில் பெரும்பாண்மையானவர்களுக்கு) பலன் குறித்து என்னால் கருத்து கூற முடியாது. ஆனால் இதில் மிக மிக குறைவான பக்க விளைவுகளே உள்ளது. சத்து ஊசி (பி காம்ளஸ்) ஊசி போடுவதில் உள்ள பக்க விளைவுகள் தவிர வேறு எதுவும் கிடையாது
மற்றப்டி ஊசி போடுபவர்களுக்கு நிறைய பலன் உண்டு.

No comments:

Post a Comment

Govt. Jobs 2020

  Government of Tamil Nadu Jobs 2020 - Survey Assistant Jobs in Chennai Government of Tamil Nadu Chennai, Tamil Nadu via Fresherslive 3 days...